Tuesday, February 15, 2011

காதல் கதை கேளூங்கல்

கண் பார்வை படர்ந்த திசை எங்கிலும் படர்ந்து மிதந்தன பனி காற்றுடன் சேர்ந்து மூடிபனியும் காதல் கொண்டு .

அத்தருணத்தில் அங்கன்னில் தென்பட்டது ஒரு கோமேதகம்(அவள் முகம்),படர்ந்து திரியும் மூடுபனியை கிழித்து கொண்டு.

அத்தோற்றத்தை கண்டனன் உறைந்து நின்றேன் நாபுறமும் உயர்ந்து நிற்க்கும் பணிமலையுடன் சேர்ந்து.

அவ்விடத்தை விட்டு நகராமல் அவளை ரசித்தேன் சாமரங்கள் தூவிடும் பணிமழையுடன் கோர்ந்து.

வாவென்று என்னை இழுத்து சென்றது என் நட்பு பட்டாளம் பனி மழையில் நனைந்தால் காய்ச்சல் பெருக்கி விடுமோ என்று.

இருந்தும் ஒப்ப வில்லையே என் சிந்தை கண் திரைதனை விட்டு மங்கிவிடும் நன்காட்சி என்று.

மனமில்லாமல் மெல்ல ஊர்ந்து வந்தடைந்தேன் அகரம் நாடி என் அறைக்கு, அககண் பார்வையை மட்டும் அவ்விடத்திலேயே விட்டு விட்டு.

மற்றொரு நாள் கிடைத்தது அவள் நட்பு இன்னொரு நண்பன் வாயிலாக, அன்று அறிமுகம் ஆனது அவள் முகாந்திரம் என்னவென்று.

சந்தோசத்தில் திகட்டினேன் நான் அனால் அடுத்த நாளே கிளம்பலாயிற்று கொண்ட கல்வி சுற்றுலா முளுதடைந்து .

எனகென ஒதுக்கிய ஆசனத்தில் அமர்கையில் ஆச்சிரியத்தின் உச்சத்துக்கே சென்றமர்ந்தேன் அவளும் எனருகே வந்து இருக்காய் கொள்ள .

வழக்கத்துடன் ஆரம்பித்த பேச்சுக்களுடன் சேர்ந்து நகர்ந்தது நேரமும்,ஒரு வழியாய் வந்தடைன்தேன் என் வீட்டிற்க்குள் ஊர்ந்து மெல்ல .

வந்தது குறும் தகவல் என் கைபேசியில் அவள் எண்ணில் இருந்து "உன்னுடன் இருந்தது பிடித்தது என்று.

அக்கணமே நானும் பதிலளித்தேன் தோழியே எனக்கும் என்று.

நாட்கள் கழிந்தன நாட்காட்டியில் திகதிகள் கிழிந்தன திடிர் என ஒரு நாள் மலர்ந்தது உன் நன்நட்பு காதலாய் என்றாள் .

வாயடைதுபோன நானோ சபித்தேன் என் சிந்தையை ஏனோ தக்கதருணத்தில் இப்படி செயலிழந்து பொய் விடுகிறாய் என்று.

ஒரு வழியாய் இயல்பு நிலைக்கு வந்த மறுகணம் நானும் வீவரித்தேன் என்னுள்ளத்திலும் மலர்ந்ததடி இக்காதல் என்று .

அவள் என்னை நினைத்தால் , அனுதினமும் நனைத்தாள் உவகை ஊற்றாக.

நானும் அவளை நனைத்தேன் தினம் தினம் மழையாக.

கொற்றும் ஊற்றை அடைத்து வைக்க நினைத்தேன் என் ஐம்புலதின்னுள் காற்றாக.

நான் உன்னுடன் காதல் வசத்தில் விழுந்தது எல்லாம் ஒரு உற்சாகத்தில் என்றால் அதே குறும் தகவல் வாயிலாக.

படபடத்து போன நானோ கேள்வி அம்புகளை எய்தேன் அதே குறும் தகவல் வாயிலாக.

போதும் தொந்தரவு செய்யாதே என விடை அளித்தால் அதே குறும் தகவல் வாயிலாக.

என் இதயத்தில் நான்கின் ஒரு அறை துடிக்கிறது அவள் காண்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விடு என்று.

அனால் மற்ற மூன்று அறைகளும் வினாக்கள் எழுப்புகின்றனவே ஏன் முடிக்க வேண்டும் மீண்டும் வருவாள் என்று.

நிலை புரியாமல் தவித்தேன் அது என்ன உற்சாகம் என்று,விடை கொடுத்தால் அட உன்னை பிடிக்கும் ஆனால் காதல் இல்லை என்று .

முடித்தேன் அந்தாதியை போதும் என்று, அடித்தேன் ஒட்டடை தங்க சிலை அல்ல சிலந்திகளின் வலை என்று .


5 comments:

  1. pengal vidukkum kadaisi nera vidugadhaikku badhil ariyaamal pala devadas-gal uruvaakkapadugiraargal..

    ReplyDelete
  2. hmmmm....
    i knw abt this feeling.. but never felt t
    nyway
    atlast m happy knwin dat u r happy nw :)))
    nanben da :))

    ReplyDelete