Tuesday, February 15, 2011

கண்ணீருடன் மஹேஷ்

உணர்ச்சி இழந்து இறந்து கிடக்கும் பெண்ணின் மார்பகத்தை அகற்றி பார்க்கும் சிங்களவனே உன்னை விட பின தின்னி கழுகு மேலானது.


உன் தாய் அவளுக்கு இருபதும் இதே அங்க உறுப்புக்கள் தானென்று ஏனோ இன வெறி எனும் விஷம் பாய்ந்த உன் சிந்தை மறந்தது.


உமது அராஜகத்தை பார்த்த புத்தர் பெருமானின் சிலை, அதுவும் குருதியில் கண்ணீர் வடித்தது.


இரும்பு தொப்பியாம் தலையில் உனக்கு, அனால் சிறு குழந்தையின் மண்டை ஓட்டை உமது காலணிகள் சிதைத்தது.


கள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தை உமது தோட்டாக்கள் துளைத்தது அதை கண்டும் காணாமல் என் நாடாளும் கட்சி அதற்க்கு துனைத்தது.


இவை அனைத்திற்கும் ஒரு நாள் பதில் அடி உள்ளது என என் அஹம் உரக்க உரைத்தது


கண்ணீருடன் மஹேஷ்


No comments:

Post a Comment