Sunday, May 20, 2018

மகிழ்வித்து மகிழ்ந்திரு!!

தடாகம் கடைந்து  மேகம்  தீர்த்து  கொண்டது  தாகம் , செய்பிழை  உணர்ந்ததாலோ மனஅழுத்தம்  கொண்டுஇருண்டது மேகம் ,நண்பனோடு  மோதி  மழையாய் கொட்டி  தீர்த்தது ,அழுத்தம்  நீங்கி  சுகமாய்  மிதந்தது, "கொட்டி  தீர்க்க  பழகு".

புனல் குடித்து  குளம்  நிறைக்க  தலைகீழாய்  விழும் நீர்வீழ்ச்சி  அது எழுவதற்கே , "எழுச்சி  பெற  பழகு ".

குடம் நிறைத்த  பின்னும்  குழாய்  பாய்ச்சிடும் தண்ணீர்,  குடம்  விழுந்தும்  வீணே ,"மனநிறைவு  பெற  பழகு ".

பாறைகளில்  மோதி , கடும்  பாதைகளை பீறிட்டு  வரும்  நதிநீர் அதன்   மனதில்  பாயும்  எண்ணம்  என்றும்  உலகவளம் , "மகிழ்வித்து  மகிழ்ந்திரு"

Friday, August 26, 2016

வர்ணஜாலம்

உலகை வர்ணித்த வண்ணம் பல வண்ணங்கள் இங்கு ஜாலமிட்டிருந்தும் , மனிதனில் வர்ணஜாலங்களை இயற்றினான் மனிதன் .
ஒரே குலம் என ஈன்றவனாயினும் வெட்டினான் பல "குலங்களை" செய்தொழில் அதைக்கொண்டு; குழுமினான் குலங்களில் மனிதன் .
இறைஅடிநாடும் பட்டனும் ஓர்ஊழியன் , பறை அடி ஆடும் கலைஞனும் ஓர்ஊழியன் , போர் நெறி நாடும் சத்ரியனும் ஓர்ஊழியன் ,நெற்கதிர் நாடும் உடையானவனும் ஓர்ஊழியன் , நான்கிற்கும் முடிவுரை ஊதியம் தான்; இதில் தாழ்வென்ன உயர்வென்ன சாதியும் தான்.
இலைதனில் இரை இட உழைத்தவன் அடித்தட்டில் , உழைத்தவன் உழைப்பை இடை நோகாமல் புசிப்பவன் மேல் தட்டில் .
தண்ணீர் தரிக்கும் குளம் பொறித்தவன் குலம் தாழ்த்தி தீண்டாதவனானான் , தான் பொரித்த குளம் தரிக்கும் நீரை தீண்டாமலானான்.
இயற்கையில் இருக்கும் பிரிவினை போதாதென்று மதம் ,நிறம் என பிரித்து முடிச்சுக்கள் இட்டோம் , அதில் தொடர்ந்து பாகப்பிரிவினை செய்து சிக்கலாக்கிவிட்டோம் .
" உலகை வர்ணிக்கும் வண்ணம் இடும் ஜாலம் எழில் கொண்டிருக்கும் , மனிதன் ஆடும் வர்ணஜாலம் குருதியின் கரை கொண்டிருக்கும் "

Wednesday, March 7, 2012

நாத்திகன்

தூணிலும் துரும்பிலும் அகரித்திருக்குமாம் ஓர் உவமை, அதற்கென எழுப்பினர் மாபெரும் ஆலயம்
அஇலக்கணத்தின் எதிர்மறையாய் வாழும் மனிதனுக்கோ சாலை ஓரத்திலே அமைந்தன நிலையம். .

சித்தாந்தத்தில் நெறி கொண்டு அந்நெறி வெறியாகி மதம் என்று உருவெடுத்தது ,
நெறிக்கும் வெறிக்கும் இடையில் சிக்கி சிதைந்து மனிதநேயம் நிலைகுழைந்தது .

மதத்தின்பால் மனம் கொண்டு வாசல் பொரித்ததோர் தரப்பு ,எதிர்மதத்தின்பால் மதம் கொண்டு பெயர்த்து வீழ்த்தியது மறுதரப்பு ,என்றோ வைத்த திடை கொழுந்து இன்றும் தழல்நெருப்பு .

பழந்தமிழ்நாட்டில் வேற்று மதத்தினரை(சமணர்களை ) கழுவில் ஏற்ற பறைசாட்ட பட்டது ஒரு மரபு , அதை இன்றும் வேறொரு பரிமாற்றத்துடன் வழிமொழிகிறது அரபு .

சுட்டதினால் தீயை கடவுளென்றார்,சுழன்றதினால் காற்றை ,பரிமாற்றம் அடையவில்லை இவர்களின் கற்பனை , அனால் பரிணாமம் வளர்த்து வீதி தோறும் கடவுள் திரிகின்றனர் பூசி கொண்டு ஒப்பனை .

கடவுளின் பெயர் கொண்டு அதில் விஷமத்தின் விஷம் பாய்ச்சு பெரும் ராஜாங்கம் (ரஷ்ய )அதை நிலைகுலைய செய்தான் ஓர் வித்தகன் (ரஸ்புடின் )அவனிடம் இருந்து மீண்டும் நிலை செய்தான் ஒரு ரட்சகன் (லெனின் ).

எட்டுத் திசை தேடியும் அகப்படாத கானலை தேடி தவித்து அலைகிறான் ஆத்திகன் , அன்பெனும் தடாகம் தன்னில் தோண்டி தாகம் தீர்த்து கொள்கிறான் நாத்திகன் .

நன்றி கடவுளே நானும் நாத்திகன் .


Sunday, June 12, 2011

தமிழ்

தமியரெனும் அவப்பெயர் வராது தமகென்றொரு மொழிசமைத்து தமிழேன்றனர் நம் மூப்பர் .

நெற்றியில் பொட்டிற்ற மாது(ழ் ) அவள் எழில் கண்டு காதல் கவிதை இயற்றினார் பெரும் கவிஞர் .

செம்மண்ணுக்கும் மூல பொருள் என கற்கள் உண்டு ,செந்தமிழின் தொடக்கம் அதை சொன்னதில்லை என்நாள்காட்டியும் இங்கு .

பாற்கடல் சுரக்கும் அமுதம் என்பதோ மிகுபுனைவின் உச்சகட்டம் , என்தமிழே அதன் சுரபி என்பது நிதர்சனம் .

சிந்தையில் பொங்கிடும் தத்துவத்தை புனைந்தனர் புலவர் பலர் நம்நாட்டில் , இன்றும் பல்கி வாழ்கின்றனர் ஏட்டில் .

சங்கத்தில் கவியரசியும் ,திருவள்ளுவரும் தமிழில் தீற்றினர் நம் வாழ்கை ,அண்மையில் மகாகவியும் அக்கவியின் தாசனும் தீற்றியது புது கவிதை

விருந்தோம்பல் புகட்டும் செந்தமிழ் அதுவே , அத்துமீரல்தனை கண்டு பொங்கிடும் ரௌத்திரத்தையும் பழக்கும் .

கற்ற்காலத்தின் முன்தோன்றி ,இக்காலம் நிலைநாற்றி வரை ,எக்காலமும் வாழும் பெருமை உண்டு நம்தமிழிர்க்கு இதை உரைக்க சொல்வோம் உலகிற்கு.

Wednesday, June 1, 2011

குழந்தை தொழிலாளி எனும் சொல் இனி இல்லை அகராதியில்

வேறூன்றி தானாக நிற்கவும் இல்லை செந்தளிறுகள் ,அதற்குள் ஆயினரே பெரும் பொதி சுமக்கும் களிறுகள்.

வாய்பாடு பாடி கல்வி பயிலும் வயதில்,கூப்பாடு போடும் வியாபாரி ஆயினர் நெடுஞ்சாலையில் .

கருவறையின் கடும்வேப்பதில் உருவெடுத்து, பின் மண்ணில் புலம்பெயர்ந்த பின்னும் , வெடித்து கருகளைகின்றனர் பட்டாசு தொழிற்சாலையில்.

பத்து திங்கள் தூமைதனை தடை இட்டு , பிறந்த நன்குழந்தை விசைக்க படுகிறதே குப்பையில், இதற்க்கா வளர்த்தால் அன்னை தன் அகப்பையில் .

ஈரம் என்பது துளியும் இல்லை கல்லால் செய்த இவர்களின் அஹத்தில்,சிதைகின்றனரே பிஞ்சு கைகளை கடும் கந்தகத்தில்.

உடன் துளைந்த துளி உயிர்கள் உறைய உள்புகுந்து வந்தடைந்தனர் வையகம் , இருந்தும் வழி இல்லை வாழ கேட்கின்றனர் யாசகம் .

மண்ணை நுகர்ந்த சாமர பூக்களும் கையாள படுவதில்லை பூக்களாய் ,வறுமையில் வாடும் குழந்தையும் கையாள படுவதில்லை குழந்தையாய் .

சென்றடைந்தனர் இருவர் காதலின் எல்லைக்கு அதன் பரிசாய் பிறந்த மழழை அது "செல்வம் " அனால் வர்தகதிர்ர்க்கு இல்லை.



"நாளைய தலைமுறை சீராய் வாழ வழி நெடுவோம் ,ஆழியில் வளரும் குழந்தை தொழிலை விளிம்பிலேயே அளித்து விடுவோம் ".

குழந்தை தொழிலாளி எனும் சொல் இனி இல்லை அகராதியில்





Sunday, March 6, 2011

பணம் வாங்கும் காந்தை

சமத்துவத்தின் குறியீட்டு மொழி பேசும் மும்மாரி, அதை செயற்முறையில் அரங்கேற்றுபவளோ ஓர் ஜாரி.

விரகம் கொதித்தவன் ஏந்துகிறான் இச்சை கொண்டு சிரட்டைதனை, இணங்கி காசுக்கு பரிமாறுகிறாள் சிரத்தைதனை.

ஓரடி வயிற்றை வளர்க்க ஐந்தடி வளர்ந்திட்ட உடலை ஏலம் இடுகிறாள் கோதை, எடுத்தவனுக்கு இரவெல்லாம் அவள் காந்தை.

அரும்பாகி பின் அரும்பாடுபட்டு மலர்ந்தவள் சிதைந்தாள் முட்கள் மீது, தத்தை போல் திரிந்தவள் பரத்தை ஆனால் மெத்தை மீது.

தாசி அவளை தரிசிக்க தக்ஷனை இட்டனர் உண்டியலில், செய்தால் புணர் சேவை சிக்கி சூழ்ச்சியின் தூண்டிலில்.

ராகத்திற்க்கே தெரியாமல் மாறிவரும் கமகங்கள், வாழ்கை பாதையில் தொலைந்த இப்பூமகள் ஆனாலே ஓர் விலைமகள்.

அடிமை வர்த்தகம் மாறியதை நினைத்தேன் முன்தினம், அனால் மாறவில்லை அதன் பரிமாற்றமே விபச்சாரம்.

என்றோ நியமித்த சம்ப்ரதாயம் இன்றும் தொடர்கிறது, பெயர் பலகை ஏதுமின்றி கூறிட்டு தசை வியாபாரம் நடக்கிறது.

இவைகளை கண்ட என்மனம் பாரதியின் நன்கவிதை ஒன்றை உரைத்தது "நல்லதோர் வீணை செய்தே அதை....................................................................."

Thursday, February 17, 2011

காப்போம் இப்பொன்பூமியை


வெப்பம் பெருதுவக்க சிறு கோளம் ஒன்று பெரும் வெடிப்புதனை விளைவுற்றது அதில் கருத்தரித்த வளிமண்டலம் ஈன்று வெளியேறியது.

காட்சி பிழையோ என வியப்பூட்டி, பேசும் சித்திரமாக தோன்றிடும் இயற்கையும் அரங்கேறியது.

இழுது மீன்களில் தொடர்ந்து ,ஊர்வன பிராணிகளை கடந்து முற்றில் பாலூட்டிகள் பிறப்பெடுத்தது.

அதிலோர் பிராணி பரிமாற்றங்களில் வந்து பலமாற்றங்களை கொண்டு நரன் என உருமாறி நவயுகம்வரை வந்தடைந்தது .

பெரும் மூளைமடிப்புகளோடு பேராற்றலையும் இணைத்தவன் எழுப்பிய தொழிற்சாலை கக்கிடும் விஷவாயு ,நுகர்ந்த காற்றுக்கும் மூச்சடைத்து.

கரியமிலம் வாய்வாயுதனை மணந்து கொண்டு, உயிர்வைவை தாரைவார்க்கும் நன்மரங்கள்,நன்றி மறந்து வெட்டி குவிகின்றான் அதன் பிணங்கள்.

சுமேரியனும் மனம் தளர்வான் வந்திங்கு அவன் புனைப்பின் வழி வந்த சிற்றூர்தி சூழலை குலைப்பதை கண்டிங்கு.

ஒசோனை கிழித்தது போதாதென்று கல்நெஞ்சம் கொண்டவன் துளைகின்றான் பூமியை எரிபொருளை தேடி சிதைகின்றான் முன் வசித்த மலைகளை பளிங்குகளை நாடி .

கற்காலத்தில் கற்களை கூர்மை செய்தான் கடும் விலங்குகளை தாக்க , இன்றோ அணுஆயுதங்கள் பரிசொதிகின்றான் அண்டை நாட்டினை தாக்க.

நன்விளைச்சல் நிலமும் தரிசானது, மும்மாறியோ அமிலம் ஊற்றுது.

இசீர்குலைவை தாங்காது இப்பொன்பூமி அந்தம் அறுந்துவிடுமோ தற்கொலை நாடி மீண்டும் வெப்பத்தை பெருதுவக்குமோ புத்தம் புது தளிராய் மாறி?