Tuesday, February 15, 2011

குளிர் காலம்.

உதிரத்தை உறைய வைக்கின்ற காலம் .

இது மனதை வருட வருகின்ற காலம்.

தொடக்கத்தில் இலைகளை உதிர்த்து விடும் காலம்.

பின்பு கிளைகளில் புதியதாய் இலைகள் உதித்திடும் காலம்.

உதித்த இலைகளும் பனித்துளி அமர்ந்த குழிவுதனில் நடுங்கிடும் காலம்.

வானமும் வெண்ணிற சாமரங்கள் தூவி நெகிழ்திடும் காலம்.

புனித ஏசு பிறந்ததும் இக்காலம்,ஆழ்வார்கள் பாசுரங்கள் தீட்டியதும் இக்காலம்.

காதலர்களின் நெருக்கத்தை கூட்டுவதும் இக்காலம்.

தம்பதியரின் புணர்தலை தூண்டுவதும் இக்காலம்.

அதுவே சில்லென்ற காற்றின் வாயிலாக உவகைதனை காட்டும் குளிர் காலம்.

No comments:

Post a Comment