Tuesday, February 15, 2011

பொய்

கவிதைக்கு அமுதூட்டும் எனப்படும் பொய் அதுவே நம் வாழ்வுதனை எரிக்கும் அமிலமும் ஊற்றும்.

புறம்பு புகழ்ந்து புறம் நீ சேர்த்த யாவும் மெய்பொருள் சேராது; புதைந்தழிந்து போகும்.

பொய் சுரக்கும் வாய்க்கு கிட்டாது போஜனம் என்றும் ஒரு மொழி உண்டு.

ஆனால் வயிற்றுக்கு உண்ணவே மெய்தனை மறுக்க வேண்டும் என ஒரு நியதி இன்று.

இயல்பான தோற்றத்தை பெருதுவக்கி காட்டிடும் இளங்கதிர் தீண்டியதால் வரும் நிழல் பிம்பம்.

அதுவே நிஜ பிம்பம் தொட நினைத்து அணுகி அருகில் சென்றடைய சுருங்கி போகும் ஓர் அதமம்.

தாகத்தை தணிப்பதர்க்கு பாலையில் தண்ணீர் தேடி அலைகையில் தூரத்தென்படும் நீர் கானல்.

நேர்மைதனை மறந்து அல்பமாக வாழ்பவனின் வாழ்க்கையோ காற்றுக்கு ஏற்றால் போல் ஆடிடும் நாணல்.

பொய் வாய் வாயிலாக நீ நடத்தும் யாவும் தற்காலிக தடை இன்றி சீராய்ச் செல்லும்.

அதை உடைத்தெறியும் வகையில் சீறி எழுந்து பொய்தனை சீரழித்து இறுதியில் வாய்மையே வெல்லும்



No comments:

Post a Comment