
ஆதாம் ஏவாள் ஒன்றிணைய வந்தான் மனிதன் என்கிறது ஆத்திகம்.
குரங்கிலிருந்து உருவெடுத்தான் மனிதன் என்கிறது விஞ்ஞானம்.
இரண்டில் எதை வழி மொழிந்தாலும் நம் பூர்வீகம் ஒன்றே என்பது உண்மை.
ஆயினும் ஏனோ இங்கு ஜாதி பிரிவுகள் சொல்லி வேற்றுமை.
சமத்துவம் என படுகிறது ஆனாலும் இருப்பது ஏற்ற தாழ்வு.
ஏழைகளுக்கு திறப்பதில்லை முதலாளித்துவத்தின் கதவு.
மக்களாட்சி என முகமூடி அணிந்து நடப்பதோ ஏகாதிபத்தியம்.
இந்த அவலம் ஓர் நாள் சீர் அமையும் என்பது சத்தியம்.
இந்நிலையை மாற்றி அமைப்பதென்பது ஒவ்வொரு இலைஞ்யனின் கடமை.
அதற்க்கு ஏற்ற ஆயுதம் அது பொது உடமை
No comments:
Post a Comment