சிந்தியுங்கள்!
ஒற்றைக் காலில் நின்றால் தரித்திரம் என்றால் உங்கள்
நடராஜரும் ஒரு தரித்திரமே..!!
நீங்கள் நடத்தும் யாகத்தில் வீணாகும் நெய்
அதைக் கண்டு நெருப்புக்கும் வயிறு எரிகிறதே..!!
கை ரேகையில் எதிர்காலம் காண்பது என்றால்
கை இல்லாதவனுக்கு இல்லையா எதிர்காலமே?
கழுதை முகம் பார்த்தால் யோகம் என்றால்
அதன் உழைப்பைப் பின்பற்றினால் பாவமோ?
தெற்குத் திசை நோக்கித் தலை வைத்தால் ஆகாது என்றால்
அத்திசையில் வசிப்பவர் மனிதர் இல்லையோ?
பூனை குறுக்கே வந்தால் அபசகுணம் என்றால்
யானை குறுக்கில் ஏறினால் சுபசகுணமோ..?
மூட நம்பிக்கைக்குள் முடங்கிக் கிடக்கும்
மூடர்களே சிந்தியுங்கள்..!!
No comments:
Post a Comment