Sunday, June 12, 2011

தமிழ்

தமியரெனும் அவப்பெயர் வராது தமகென்றொரு மொழிசமைத்து தமிழேன்றனர் நம் மூப்பர் .

நெற்றியில் பொட்டிற்ற மாது(ழ் ) அவள் எழில் கண்டு காதல் கவிதை இயற்றினார் பெரும் கவிஞர் .

செம்மண்ணுக்கும் மூல பொருள் என கற்கள் உண்டு ,செந்தமிழின் தொடக்கம் அதை சொன்னதில்லை என்நாள்காட்டியும் இங்கு .

பாற்கடல் சுரக்கும் அமுதம் என்பதோ மிகுபுனைவின் உச்சகட்டம் , என்தமிழே அதன் சுரபி என்பது நிதர்சனம் .

சிந்தையில் பொங்கிடும் தத்துவத்தை புனைந்தனர் புலவர் பலர் நம்நாட்டில் , இன்றும் பல்கி வாழ்கின்றனர் ஏட்டில் .

சங்கத்தில் கவியரசியும் ,திருவள்ளுவரும் தமிழில் தீற்றினர் நம் வாழ்கை ,அண்மையில் மகாகவியும் அக்கவியின் தாசனும் தீற்றியது புது கவிதை

விருந்தோம்பல் புகட்டும் செந்தமிழ் அதுவே , அத்துமீரல்தனை கண்டு பொங்கிடும் ரௌத்திரத்தையும் பழக்கும் .

கற்ற்காலத்தின் முன்தோன்றி ,இக்காலம் நிலைநாற்றி வரை ,எக்காலமும் வாழும் பெருமை உண்டு நம்தமிழிர்க்கு இதை உரைக்க சொல்வோம் உலகிற்கு.

Wednesday, June 1, 2011

குழந்தை தொழிலாளி எனும் சொல் இனி இல்லை அகராதியில்

வேறூன்றி தானாக நிற்கவும் இல்லை செந்தளிறுகள் ,அதற்குள் ஆயினரே பெரும் பொதி சுமக்கும் களிறுகள்.

வாய்பாடு பாடி கல்வி பயிலும் வயதில்,கூப்பாடு போடும் வியாபாரி ஆயினர் நெடுஞ்சாலையில் .

கருவறையின் கடும்வேப்பதில் உருவெடுத்து, பின் மண்ணில் புலம்பெயர்ந்த பின்னும் , வெடித்து கருகளைகின்றனர் பட்டாசு தொழிற்சாலையில்.

பத்து திங்கள் தூமைதனை தடை இட்டு , பிறந்த நன்குழந்தை விசைக்க படுகிறதே குப்பையில், இதற்க்கா வளர்த்தால் அன்னை தன் அகப்பையில் .

ஈரம் என்பது துளியும் இல்லை கல்லால் செய்த இவர்களின் அஹத்தில்,சிதைகின்றனரே பிஞ்சு கைகளை கடும் கந்தகத்தில்.

உடன் துளைந்த துளி உயிர்கள் உறைய உள்புகுந்து வந்தடைந்தனர் வையகம் , இருந்தும் வழி இல்லை வாழ கேட்கின்றனர் யாசகம் .

மண்ணை நுகர்ந்த சாமர பூக்களும் கையாள படுவதில்லை பூக்களாய் ,வறுமையில் வாடும் குழந்தையும் கையாள படுவதில்லை குழந்தையாய் .

சென்றடைந்தனர் இருவர் காதலின் எல்லைக்கு அதன் பரிசாய் பிறந்த மழழை அது "செல்வம் " அனால் வர்தகதிர்ர்க்கு இல்லை.



"நாளைய தலைமுறை சீராய் வாழ வழி நெடுவோம் ,ஆழியில் வளரும் குழந்தை தொழிலை விளிம்பிலேயே அளித்து விடுவோம் ".

குழந்தை தொழிலாளி எனும் சொல் இனி இல்லை அகராதியில்