
கல்லில் உறங்கும்கற்சிலைக்கு
உயிர் தரும் சிற்பி போல்
என்னுள் உழன்று கிடக்கும்
கவித்துவத்தைஉயிர்ப்பித்த
நீயும் சிற்பி தானடி..
என் அழகி !
அந்தச் சிற்பியின் ஆயுதம்உளி..
இந்தச் சிற்பியின் ஆயுதம்விழி..
உன் விழியெனும்உளியால்
என் கவிச் சிற்பத்தை
செதுக்கிய சிற்பியடி நீ..!!
No comments:
Post a Comment