சமத்துவத்தின் குறியீட்டு மொழி பேசும் மும்மாரி, அதை செயற்முறையில் அரங்கேற்றுபவளோ ஓர் ஜாரி.
விரகம் கொதித்தவன் ஏந்துகிறான் இச்சை கொண்டு சிரட்டைதனை, இணங்கி காசுக்கு பரிமாறுகிறாள் சிரத்தைதனை.
ஓரடி வயிற்றை வளர்க்க ஐந்தடி வளர்ந்திட்ட உடலை ஏலம் இடுகிறாள் கோதை, எடுத்தவனுக்கு இரவெல்லாம் அவள் காந்தை.
அரும்பாகி பின் அரும்பாடுபட்டு மலர்ந்தவள் சிதைந்தாள் முட்கள் மீது, தத்தை போல் திரிந்தவள் பரத்தை ஆனால் மெத்தை மீது.
தாசி அவளை தரிசிக்க தக்ஷனை இட்டனர் உண்டியலில், செய்தால் புணர் சேவை சிக்கி சூழ்ச்சியின் தூண்டிலில்.
ராகத்திற்க்கே தெரியாமல் மாறிவரும் கமகங்கள், வாழ்கை பாதையில் தொலைந்த இப்பூமகள் ஆனாலே ஓர் விலைமகள்.
அடிமை வர்த்தகம் மாறியதை நினைத்தேன் முன்தினம், அனால் மாறவில்லை அதன் பரிமாற்றமே விபச்சாரம்.
என்றோ நியமித்த சம்ப்ரதாயம் இன்றும் தொடர்கிறது, பெயர் பலகை ஏதுமின்றி கூறிட்டு தசை வியாபாரம் நடக்கிறது.
இவைகளை கண்ட என்மனம் பாரதியின் நன்கவிதை ஒன்றை உரைத்தது "நல்லதோர் வீணை செய்தே அதை....................................................................."