Tuesday, February 15, 2011

இனிச் சீறி எழும் எங்கள் ஈழம்.

உயிர் பிரிந்த யாக்கை எரியும் ஏறி தழலில்
உயிரோடு நாங்கள் எரிகின்றோம் சொந்த
மண்ணில்..

வெடிகுண்டு வெடித்தது எட்டுத் திசை
அதில் சிக்கிச் சிதைந்தது எங்கள் தசை.

எங்கள் உதிரம் கலந்ததினாலோ இந்தச் செம்புலம்
அதில் விதைத்தார்கள் எங்கள் பிண்டம் எனும்
உரம்..

இத்தனை துன்புறுத்தல்கள் அனுபவித்தது
நாங்கள்
ஆயினும் உங்கள் அகராதியில் தீவிரவாதிகள்
எனப்படுகிறோம் நாங்கள்

உங்கள் கைகளால் அழிந்தது போதும் எங்கள் நிலம்
இனிச் சீறி எழும் எங்கள் ஈழம்.

No comments:

Post a Comment