Tuesday, February 15, 2011

தோழமை

பசும்புல்லின் நுனியில் அகரம் கொள்ளும் வெம்பணி, அது தூய்மையின் செம்மை.

அதனையும் பின்தங்க வைத்திடும் நம் உள்ளத்தில் வீற்றிடும் தோழமை.

சுற்றத்தில் இல்லை என்றாலும், உற்றத்தில் வரவில்லை என்றாலும் என்றும் சுயநலம் கொண்டதில்லை.

அகசியம் செய்தாலும்,சில அகடம் புரிந்தாலும் என்றும் மனம் வெம்ப வைத்ததில்லை.

முகனகை பாராமல், அகனகைதனை கண்டு ஆற்கொள்ளுமாம் நட்பு நம்மை.

நன்நட்பு அமைதிராதநன் வாழ்க்கையோ ஒன்றுக்கும் உதவிடாத ஓர் உடம்பை.

நம் குறைதனிலும் நிரைதனை சேகரித்து அழகாய் எடுத்துரைக்கும் நேர்மை.

என்றும் மங்கிடாத வெய்யோனை போன்றது நம் நெஞ்சத்தில் ஒழி பேருக்கும் தோழமை.

2 comments: