
வெப்பம் பெருதுவக்க சிறு கோளம் ஒன்று பெரும் வெடிப்புதனை விளைவுற்றது அதில் கருத்தரித்த வளிமண்டலம் ஈன்று வெளியேறியது.
காட்சி பிழையோ என வியப்பூட்டி, பேசும் சித்திரமாக தோன்றிடும் இயற்கையும் அரங்கேறியது.
இழுது மீன்களில் தொடர்ந்து ,ஊர்வன பிராணிகளை கடந்து முற்றில் பாலூட்டிகள் பிறப்பெடுத்தது.
அதிலோர் பிராணி பரிமாற்றங்களில் வந்து பலமாற்றங்களை கொண்டு நரன் என உருமாறி நவயுகம்வரை வந்தடைந்தது .
பெரும் மூளைமடிப்புகளோடு பேராற்றலையும் இணைத்தவன் எழுப்பிய தொழிற்சாலை கக்கிடும் விஷவாயு ,நுகர்ந்த காற்றுக்கும் மூச்சடைத்து.
கரியமிலம் வாய்வாயுதனை மணந்து கொண்டு, உயிர்வைவை தாரைவார்க்கும் நன்மரங்கள்,நன்றி மறந்து வெட்டி குவிகின்றான் அதன் பிணங்கள்.
சுமேரியனும் மனம் தளர்வான் வந்திங்கு அவன் புனைப்பின் வழி வந்த சிற்றூர்தி சூழலை குலைப்பதை கண்டிங்கு.
ஒசோனை கிழித்தது போதாதென்று கல்நெஞ்சம் கொண்டவன் துளைகின்றான் பூமியை எரிபொருளை தேடி சிதைகின்றான் முன் வசித்த மலைகளை பளிங்குகளை நாடி .
கற்காலத்தில் கற்களை கூர்மை செய்தான் கடும் விலங்குகளை தாக்க , இன்றோ அணுஆயுதங்கள் பரிசொதிகின்றான் அண்டை நாட்டினை தாக்க.
நன்விளைச்சல் நிலமும் தரிசானது, மும்மாறியோ அமிலம் ஊற்றுது.
இசீர்குலைவை தாங்காது இப்பொன்பூமி அந்தம் அறுந்துவிடுமோ தற்கொலை நாடி மீண்டும் வெப்பத்தை பெருதுவக்குமோ புத்தம் புது தளிராய் மாறி?
super semma beautiful .......
ReplyDeletethanks machi
ReplyDelete