Tuesday, February 15, 2011

அன்னையின்றி வேராருமில்லை

நம்மை சுமை என்று எண்ணாது பத்துத் திங்கள் அகடிலும் வாழ்நாள் எல்லாம் அகலங்கமான உலகத்திலும் சுமக்கின்றவள்

ஆழி அதன் ஆழத்தை விடவும் ஆழமான அமரைதனில்வைத்து நம் உயிர்தனை வளர்க்கின்றவள்

சுயநலம் ஏதுமின்றி தன் உயிரை வருத்திக் கொண்டு நம்மை இங்கு உயிர்ப்பித்தவள்

செங்குறுதியைப் பாலாக்கி நம் வயிற்றுப் பசியாற்றிப் பெருமிதம் அடைகின்றவள்

கேள்வி ஏதும் இல்லாமல் நம் நலன் எண்ணிப் பல வேள்வி தனைப் புரிகின்றவள்

தன்னைப் பற்றிக் கவலை இல்லாது நம் வாழ்வில் இருளகல ஊனுருக்கி அகலாக எரிகின்றவள்

தவழ்ந்து நீ நடந்தால் முழங்கால் காயமாகுமோ என்று அகக்கையில் தாங்குபவள்

எட்டெடுத்து நீ நடப்பதை கண் இமைக்காது கண்டு மெய் மறந்திருப்பவள்

எதிர்பார்ப்பு ஏதுமின்றி உவகைக்கடல் தன்னில் நம்மை மூழ்கடிப்பவள்

இத்தனைப் பெருமை நிறைந்து இருக்கும் அந்த ஆக்கமகள் நம் அன்னையின்றி வேராருமில்லை

2 comments: