தடாகம் கடைந்து மேகம் தீர்த்து கொண்டது தாகம் , செய்பிழை உணர்ந்ததாலோ மனஅழுத்தம் கொண்டுஇருண்டது மேகம் ,நண்பனோடு மோதி மழையாய் கொட்டி தீர்த்தது ,அழுத்தம் நீங்கி சுகமாய் மிதந்தது, "கொட்டி தீர்க்க பழகு".
புனல் குடித்து குளம் நிறைக்க தலைகீழாய் விழும் நீர்வீழ்ச்சி அது எழுவதற்கே , "எழுச்சி பெற பழகு ".
குடம் நிறைத்த பின்னும் குழாய் பாய்ச்சிடும் தண்ணீர், குடம் விழுந்தும் வீணே ,"மனநிறைவு பெற பழகு ".
பாறைகளில் மோதி , கடும் பாதைகளை பீறிட்டு வரும் நதிநீர் அதன் மனதில் பாயும் எண்ணம் என்றும் உலகவளம் , "மகிழ்வித்து மகிழ்ந்திரு"
புனல் குடித்து குளம் நிறைக்க தலைகீழாய் விழும் நீர்வீழ்ச்சி அது எழுவதற்கே , "எழுச்சி பெற பழகு ".
குடம் நிறைத்த பின்னும் குழாய் பாய்ச்சிடும் தண்ணீர், குடம் விழுந்தும் வீணே ,"மனநிறைவு பெற பழகு ".
பாறைகளில் மோதி , கடும் பாதைகளை பீறிட்டு வரும் நதிநீர் அதன் மனதில் பாயும் எண்ணம் என்றும் உலகவளம் , "மகிழ்வித்து மகிழ்ந்திரு"
No comments:
Post a Comment