Sunday, May 20, 2018

மகிழ்வித்து மகிழ்ந்திரு!!

தடாகம் கடைந்து  மேகம்  தீர்த்து  கொண்டது  தாகம் , செய்பிழை  உணர்ந்ததாலோ மனஅழுத்தம்  கொண்டுஇருண்டது மேகம் ,நண்பனோடு  மோதி  மழையாய் கொட்டி  தீர்த்தது ,அழுத்தம்  நீங்கி  சுகமாய்  மிதந்தது, "கொட்டி  தீர்க்க  பழகு".

புனல் குடித்து  குளம்  நிறைக்க  தலைகீழாய்  விழும் நீர்வீழ்ச்சி  அது எழுவதற்கே , "எழுச்சி  பெற  பழகு ".

குடம் நிறைத்த  பின்னும்  குழாய்  பாய்ச்சிடும் தண்ணீர்,  குடம்  விழுந்தும்  வீணே ,"மனநிறைவு  பெற  பழகு ".

பாறைகளில்  மோதி , கடும்  பாதைகளை பீறிட்டு  வரும்  நதிநீர் அதன்   மனதில்  பாயும்  எண்ணம்  என்றும்  உலகவளம் , "மகிழ்வித்து  மகிழ்ந்திரு"

No comments:

Post a Comment