தமியரெனும் அவப்பெயர் வராது தமகென்றொரு மொழிசமைத்து தமிழேன்றனர் நம் மூப்பர் .
நெற்றியில் பொட்டிற்ற மாது(ழ் ) அவள் எழில் கண்டு காதல் கவிதை இயற்றினார் பெரும் கவிஞர் .
செம்மண்ணுக்கும் மூல பொருள் என கற்கள் உண்டு ,செந்தமிழின் தொடக்கம் அதை சொன்னதில்லை என்நாள்காட்டியும் இங்கு .
பாற்கடல் சுரக்கும் அமுதம் என்பதோ மிகுபுனைவின் உச்சகட்டம் , என்தமிழே அதன் சுரபி என்பது நிதர்சனம் .
சிந்தையில் பொங்கிடும் தத்துவத்தை புனைந்தனர் புலவர் பலர் நம்நாட்டில் , இன்றும் பல்கி வாழ்கின்றனர் ஏட்டில் .
சங்கத்தில் கவியரசியும் ,திருவள்ளுவரும் தமிழில் தீற்றினர் நம் வாழ்கை ,அண்மையில் மகாகவியும் அக்கவியின் தாசனும் தீற்றியது புது கவிதை
விருந்தோம்பல் புகட்டும் செந்தமிழ் அதுவே , அத்துமீரல்தனை கண்டு பொங்கிடும் ரௌத்திரத்தையும் பழக்கும் .
கற்ற்காலத்தின் முன்தோன்றி ,இக்காலம் நிலைநாற்றி வரை ,எக்காலமும் வாழும் பெருமை உண்டு நம்தமிழிர்க்கு இதை உரைக்க சொல்வோம் உலகிற்கு.
No comments:
Post a Comment